Saturday 7 July 2012

விவசாயிகள் தற்கொலை:


       ஒரு குண்டூசி தயாரிப்பாளர் தனது பொருளுக்குக்கான விலையை தான் நிர்ணயம் செய்கிறார்.  ஆனால் ஒரு விவசாயி தனது விலை பொருளுக்குத் தான் விலை நிர்ணயம் செய்ய இயலாது.விதை,உரம் விலையேற்றம் மற்றும் இயற்கை இடற்பாடுகளை கடந்து வியாபாரிகள்  நிர்ணயம் செய்த விலையில் தான் விற்க   வேண்டும். கடைசியில் அவனுக்கு மிஞ்சுவது கோவணம் மட்டுமே.

         விவசாயிகள் தற்கொலையில் முதல் இடம் மகாராஷ்ட்ரா,   அடுத்து  ஆந்திரா, கர்நாடகா,மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கார். மன்மோகன் அரசுக்கு இதைப் பற்றிய கவலை இல்லை. ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ள அண்ணா ஹசாரே இது பற்றி குரல் கொடுத்ததாக தெரியவில்லை.

      சாராய வியாபாரி விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான "KING FISHER" விமான கம்பெனிக்கு ரூபாய் 7000 கோடி கடன் உள்ளது. அதைத் தூக்கி நிறுத்த மன்மோகன் அரசு துடிக்கிறது.

     சாராய வியாபாரி விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான "UNITED BREWERIES" கம்பெனிக்கு 40 கோடி கடன் “BANK OF MAHARASTRA" ல் உள்ளது. ஒரு ரூபாய் கூட திருப்பி செலுத்தாமல் மேலும் 150 கோடி கடன் தர அந்த வங்கி முடிவெடுத்துள்ளது.   அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் விவசாயிகள் மற்றும் ஓய்வு ஊதியம் பெறுவோர்.    

       கடனைத் திருப்பிச் செலுத்தாத பெரு முதலாளிகளுக்கு வெண்ணைய். அப்பாவி பொது மக்களுக்கு சுண்ணாம்பு.

       வாழ்க ஜனநாயகம்.

    

1 comment:

  1. அருமையான கேள்வி. ஆனால் மாண்புமிகு. மன்மோகன் அவர்களுக்கு புரிய வில்லையே !

    சு.கருப்பையா.

    ReplyDelete