காமராசர் எனும் மாமனிதர்
காமராசர் படிக்காதவர். வறுமை,பசியால் பள்ளிக்குச் சென்று படிக்க இயலாத ஏழைக் குழந்தைகள் படிக்கும் பொருட்டு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் தான் நாடு வளம் பெறும் பொருட்டு வைகை, சாத்தனூர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,மணிமுத்தாறு, அமராவதி போன்ற அணைகள் கட்டப்பட்டன. அவர் ஒரு போதும் பதவியைத் தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் தவறாக பயன் படுத்தியதில்லை.
காமராசருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் கல்வியை ஏலம் விட்டு சுயநிதி கல்லூரிகள் பெருக வழி வகுத்தனர். இதனால் சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு கல்வி எட்டாக் கனியாகி விட்டது. காமராசர் ஆட்சிக்குப் பின் எந்தவொரு அணைக்கட்டுகளும் கட்டப்படவில்லை.
காமராசர் மக்களுக்காக பாடுபட்டார். மக்களைப் படிக்கச் சொன்னார். பின்வந்த ஆட்சியாளர்களோ தன் மக்களுக்காக, தன் உறவினர்களுக்காக பாடுபட்டனர். சாராயக்கடைகளைத் திறந்து மக்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்தனர்.
தமிழகத்தில் 4000 நூலகங்கள் தான் உள்ளன. ஆனால் சாராயக்கடைகளின் எண்ணிக்கையோ 6900. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தான் குடிப்போரின் எண்ணிக்கை அதிகம்.மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய தருணம் இது.
மக்களின் நலனில் அக்கறையற்ற ஆட்சியாளர்களைத் தூக்கி எறிவோம்.
மாமனிதர் காமராசரை போற்றுவோம். நினைவு கூர்வோம் இந்தத் தருணத்தில்.