Tuesday 13 November 2012

தீபாவளியைத் தவிர்ப்போம்


வருடம் தோறும்  வரும் தீபாவளியைப் போல் இந்த வருடமும் வந்து போய்விட்டது. சாமானியன் வயிற்றை, வாயைக் கட்டி சேர்த்து வைத்த பணத்தை கொண்டு தனது குழந்தைகளின் ஆசையைப் பூர்த்தி செய்து, தீபாவளியை வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்து தற்போது அடுத்த வேளை உணவுக்காக உழைக்க தயாராகிவிட்டான்.

தீபாவளியன்று வெடிக்கும் பட்டாசுப் புகை தொழிற்சாலையிலிருந்து 3 நாட்கள் வெளியாகும் புகைக்குச் சமம். பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் உயிர் இழப்புகள் ஏராளம். நமது சிறிது நேர சந்தோசத்திற்காக நாம் வெடிக்கும் பட்டாசு அடுத்தவர் உயிரைப் பறிக்கவும்,அடுத்தவர் சொத்துக்களை அழிக்கவும் காரணமாகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள்(குழந்தைத் தொழிலாளியும்) பெறும் கூலி வெறும் 70 ரூபாய் தான். ஏழை, எளிய மக்கள் தங்கள் வயிற்றைக் கழுவ அங்கீகாரம் இல்லாத, பாதுகாப்பு இல்லாத தொழிற்சாலைகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் வருடம் தோறும் ஏற்படும் உயிரிழப்புகள் ஏராளம். சமீபத்திய முதலிபட்டி விபத்து ஓர் உதாரணம்.

தீபாவளி என்பது நரகாசுரன் என்ற அரக்கனை அழித்த திருநாள் என்று புராணம் கதை சொல்கிறது.

நம் மனதிலிருக்கும் தீய குணங்களை அகற்றி,  அன்பு, வாய்மை, சகோதரத்துவம் என்ற நல்ல குணங்களை மனதில் கொண்டு வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும். அப்படி வாழ்ந்தால் நமக்கு தினமும் தீபாவளிதான். இதற்கு தீபாவளி என்றொரு நாள் தேவையில்லை.

சிந்திப்போம்!

No comments:

Post a Comment