Tuesday 14 August 2012

ஆகஸ்ட் 15-ஒரு சடங்கு
இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகின்றன. 1947 ஆக்ஸ்ட் 15, நள்ளிரவில் விடுதலை அடைந்ததால் தான் என்னவோ இன்னும் இருளில் இருந்து நம்மால் மீள முடியவில்லை.
மொகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்ததை படையெடுப்பு என்றும், ஆங்கிலேயர்கள் வந்ததை வரவு என்றும் சொல்லப்படுகிறது. மொகலாயர்கள் இந்தியாவுக்குள் வந்து இந்திய பெண்களை மணந்து, இந்திய நாட்டில் ஆட்சி செய்து இந்தியனாகவே வாழ்ந்தார்கள். நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துச் செல்லவில்லை. ஆனால் ஆங்கிலேயர்களோ இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

காந்தி, சுபாக்ஷ் சந்திர போஸ், பக்த் சிங், வ.உ.சி, பாரதி, திருப்பூர் குமரன்,வீரபாண்டிய கட்டபொம்மன், திப்பு சுல்தான்  போன்ற எண்ணற்ற தியாகிகளால் பெற்ற விடுதலையால் மக்கள் சந்தோசப் படும் சூழல் தற்போது இல்லை. நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க இந்திய நாட்டின் பெரு முதலாளிகள், பன்னாட்டு கம்பெனிகள் போன்றோருக்கு ஆட்சியாளர்கள் துணை. அடுத்த ஒரு விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

சந்தைப் பொருளாதாரத்தை திறந்து விட்ட மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம், அலுவாலியா, ரங்கராஜன் போன்ற பொருளாதார மேதைகள் நாட்டை சீரழிவு பாதை கொண்டு சென்று விட்டனர். பிரேசில், கிரீஸ் போன்ற நாடுகள் சந்தித்த சீரழிவை இந்தியாவும் சந்திக்கிறது.

நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க இடம் தர இயலாத மன்மோகன் அரசு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பக்களுக்கு இலவச செல்போன் தர இருக்கிறதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்திய எஜமானர்களின் கட்டளையை நிறைவேற்றும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற அடுத்ததொரு சுதந்திரப் போரட்டத்தை ஆரம்பிப்போம்.

விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்.




No comments:

Post a Comment